13 February 2008

என்னைப் புரியாதா!!!

உன்னைப் பார்க்கும் பொழுது
மனம் கொட்டிவிடு என்கிறது!!
வாயோ வார்த்தைக் கிடைக்காமல் தவிக்கிறது!

மனமும் வார்த்தையும் சேரும் நேரம்
கண்கள் உன்னைக் காண முடியாமல் தவிக்கிறது!!

என்னடா செய்வேன் நான்
என்றடா புரியும் என் மனம்!!

உன்னைக் காதலிக்க காரணம் கேட்கிறாய்
என்ன காரணம் நான் சொல்ல
நீ நல்லவன்,
என்னைப் படிப்பவன்,
இது போதாதா,
உன்னை நான் காதலிக்க...

உன்னை நான் மறக்க
நீ நடத்தும் இந்த நாடகமும் புரிகிறது!!

மறக்கவும் முடியாமல்,
மறைக்கவும் முடியாமல்
தவிக்கும் என் மனம்
நீ அறிய
நான் என்னடா செய்ய!!

காத்திருப்பேன்
என் ஆயுள் வரை காத்திருப்பேன்
உன்னை சுமக்க முடியாவிட்டாலும்
உன் நினைவுகளை,
என் உயிர் உள்ள வரை சுமக்க நினைக்கும்
என்னைப் புரியாதா!!!

No comments: