16 May 2008

நோ கவலை ப்ளிஸ்!!

இன்று நம்மில் பலர் நிறைய படித்து, புத்திசாலியாகத் திகழ்கிறார்கள். அப்படிப் பட்டவர்கள் கவலையில் சிக்கித் தவித்தால், அவர்கள் படித்த படிப்பிற்கோ, அவர்களுடைய அறிவிற்கோ எந்தவித பிரயோஜனமும் இல்லை.

வாழ்க்கையில் முன்னேறிய பலருடைய வாழ்க்கையைத் திருப்பிப் பார்த்தால் நமக்கு ஒன்றுத் தெரியும். அவர்கள் தேவையற்ற விஷயங்களுக்கு எல்லாம் கவலைப்பட்டுருக்க மாட்டார்கள் என்று.

கவலை என்பது ஒரு அரக்கனைப் போன்றது. அது நம் மனதுள் புகுந்து விட்டால் பல நல்ல சிந்தனைகள் நம் மனதை விட்டுப் போய் விடும். நல்ல சிந்தனை என்பது தவம் போன்றது. நம் எண்ண அலைகள் பலவிதமாக மாறி இறுதுயில் ஒரு புதிய பரிமணத்தை அடைவது என்ப்து தவத்திற்கு பின் கிடைக்கும் வரம் போன்றது.

நாம் கவலையுடன் இருந்தால் நல்ல சிந்தனை மட்டும்மல்ல, சுய நினைவும், கல்வியால் நாம் பெற்ற அறிவும் கூட வராமல் போய் விடும். நம் லட்சியம் மற்றும் சுயமுயற்சியால் நாம் அடைய வேண்டிய முன்னேற்றத்தை கவலையால் அடையாமலே போய் விடலாம்.

கவலைகள் பலவிதம். அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். நான் ஏதோ கவலையில் இருந்த போது என் நண்பர் எனக்கு கூறிய அறிவுரை இது.

' உனக்காவது உன் கவலை என்னவென்றாவது தெரிந்திருக்கிறது. அதனால் எளிதில் வெளியே வந்து விடலாம்.

ஆனால் நிறைய பேருக்கு அவரகள் எதற்காக கவலைப் படுகிறோம் என்றே தெரியாமல் இருக்கிறார்கள்.

அவர்களை நினைத்துப் பார்த்தாலே உன் கவலை எல்லாம் உனக்கு பெரிதாகத் தெரியாது' என்று...

என்ன என் நண்பரின் கருத்து சரிதானே?

நம் மனம் கவலையைப் போட்டு வைக்கும் குப்பைத் தொட்டிக் கிடையாது.

சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லையென்றால் மனிதற்கு ஏது பலம்

அதனால் தான் சொல்கிறேன். எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள் என்று..
இது எனக்கும் கூட நன்றாகவே பொருந்தும்.

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!!

- பாரதியார்

No comments: