15 December 2009

மீண்டும் வருகிறேன்!!

மீண்டும் வருகிறேன்!!

ரொம்ப நாட்கள் ஆகி விட்டது ப்ளாக் எழுதி.
இப்பொழுது மீண்டும் வருகிறேன் ப்ளாக் எழுத..

கடந்த ஒரு வருடத்தில் நிறைய நடந்து விட்டது.

திருமணம் முடிந்து என் கணவருக்கு வேலை மதுரைக்கு மாற்றலாகி விட்டதால்
பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு மதுரை வந்து இங்கே திரும்பவும் வேலை தேடும் படலத்தைத் தொடங்கி ஒரு கம்பெனியில் வேலையும் வாங்கி நேரம் ஒத்து வராத காரணத்தால் அந்த வேலையும் விட்டு இன்று வீட்டில் சும்மா இருக்கிறேன்.

என்ன செய்ய எனக்கும் என் கணவருக்கும் வெவ்வேறு பணி நேரம்.எனக்கு 10 மணி தொடங்கி மாலை 7 மணிக்கு முடியும் என்றால்
என் அவர்க்கு மதியம் 1 தொடங்கி இரவு 10.30 அல்லது 11 மணி வரை வேலை.
சந்திக்கும் வேளை குறையும் பட்சத்தில் கருத்து வேறு பாடும், பிரச்சணைகளும் வரத்தானே செய்யும்.அதனால் தான் இன்று வேலையை விட்டு வீட்டில் சும்மா இருக்கிறேன்.

வேலைக்குப் போகாத திருமணம் ஆன பெண்கள் வீட்டில் சும்மா இருப்பதாக கூற கூடாது.

எத்தனை வேலைகள்!!

சமைப்பது, மாவாட்டுவது, துணிகளை துவைக்கும் இயந்திரத்தில் போட்டு துவைத்த பின் காய வைத்து மடித்து எடுத்து வைப்பது!!,பணிப் பெண் வீடு கூட்டி, பாத்திரம் கழுவுவதை மேற் பார்வையிடுவது!!

இப்படி நிறைய வேலைகள்.

வேலைக்கு போகும் திருமணம் ஆன பெண்களும் இந்த வேலைகளை எல்லாம் செய்யாமல் இல்லை.
மேலே சொன்ன அத்தனை வேலையையும் பார்க்க திட்டம் திட்டி வீட்டு வேலையோடு அலுவலக வேலையையும் செய்யத் தான் செய்யகிறார்கள்.

இதில் நான் இரண்டாம் ரகம்

வீட்டு வேலையோடு அலுவலக பரபரப்புமாக இருந்த எனக்கு
இன்று எப்படி பொழுதைக் கழிப்பது என்றே தெரியவில்லை.

பெண்கள் வேலைக்கு போவது பணம் சம்பாதிக்க மட்டும் அல்ல
வேலைக்கு போவதால் ஒரு வித தைரியம் கிடைக்கிறது.
மற்றவர்களுக்கு நம்மாலும் உதவ முடியும் என்ற எண்ணம் உண்டாவதால்
வேலைக்கு போகும் பெண்ணிற்கு ஒரு கம்பீரம் உண்டாகிறது.

ஆனால் வேலை இல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்ணிற்கோ தேவையே இல்லாத எண்ணங்கள்..

அதனால் தான் மீண்டும் எழுதலாம் என்று தொடங்கியிருக்கிறேன்.
நிறைய புத்தகம் வாசிக்க ஆரம்பித்து இருக்கிறேன்.

இந்த நிலையில் மீண்டும் சென்னைக்கு மாற்றலாகி விட்டது என் கணவருக்கு.

கணிணியும் இல்லாத நிலையில் திரும்பவும் நான் எழுதுவது தடைப் பட்டுப் போக நிறைய வாய்ப்பு உள்ளது.

வாழ்க்கை என்னும் சக்கரம் எவ்வளவு வேகமாக சுற்றுகிறது.
அந்த சக்கரத்தில் மாட்டிக் கொண்டு நானும் சுற்றிக் கொண்டு இருக்கிறேன்.

பார்க்கலாம் என்ன நடக்கிறதேன்று....

மீண்டும் சென்னைக்கு வரும் எங்களுக்கு தங்க வீடு வேண்டும் அல்லவா?
அதைத் தேடி அலைந்த கதையை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

2010ல் சென்னைவாசி நான்!!
மீண்டும் வருகிறேன்!!

5 comments:

tt said...

welcome!!

தமிழன் வீதி said...

"வாழ்க்கை என்னும் சக்கரம் எவ்வளவு வேகமாக சுற்றுகிறது.
அந்த சக்கரத்தில் மாட்டிக் கொண்டு நானும் சுற்றிக் கொண்டு இருக்கிறேன்"


நீங்கள் மட்டுமல்ல எல்லோரும்தான். மீண்டும் எழுத எனது வாழ்த்துகள்.

-தோழன் மபா

Karthik Kumar said...

hey.. coming back to chennai.. cool.

Karthik Kumar said...

eludu eludi konde iru...

Anent said...

மீண்டும் வருகிறேன்!! - எப்போ?