14 December 2011

இண்டர்நெட் இல்லாமல் ஒரு நாள்!!

இன்று அலுவலகத்தில் யாருக்கும் வேலை இல்லை.
ஆமாம் இண்டர்நெட் தான் வேலை செய்யவில்லையே.
எதுவாக இருந்தாலும் கூகுள் தாத்தாவிடம் கேட்கமால் ஒரு எழுத்துக் கூட அடிக்க மாட்டோம். அவ்வளவு மாரியாதை என்று நினைக்க வேண்டாம். பல போருக்குக் கூகுள் இல்லாமல் வேலைப் பார்க்கத் தெரியாது என்பது தான் உண்மை.

பலருக்கு காலை வந்தவுடன் முதல் வேலையே ஜிமெயில், யாகூ, போஸ் புக் பார்ப்பது தான். வேலை எல்லாம் அப்புறம் தான்.

என்ன பிரச்சனை என்று மண்டையை பிய்த்துக் கொண்டே பரபரப்பாய் இயங்கும் அட்மின்ங்கள் ஒருபுறம். யார் யார் ஆன்லைனில் தகவல் (நண்பர்கள் கூட்டம் கிளையன்ட் கூட்டம் அல்ல) அனுப்பியிருப்பார்களோ என்ற தவிப்பில் சிலர். வேலைத் தான் இல்லையே இன்றய பொழுதை சிரித்துப் பேசி மகிழ்ச்சியாகக் கழிப்போம் என்ற கூட்டம் ஒரு புறம், இப்படியே போனால் வேலையை எப்படி முடிப்பது என்ற கவலையில் மேலதிகாரிகள் ஒருபுறம். என்ன செய்வது என்றே தெரியாமல் என்னைப் போல் எதையோ கிறுக்கும் கூட்டம் ஒருபுறம்.

இன்றய பொழுது இப்படியே போய் விடுமோ?? காலை 9.30க்குத் தொடங்கி இப்போது மணி மாலை 4.00 . இன்னும் சரி செய்த பாடில்லை. சிறிது நேரம் வருகிறது. பின் இணைப்பு போய் விடுகிறது.

இப்பொழுது வீட்டிற்க்கு அனுப்பினால் நன்றாகத் தான் இருக்கும். ஒரு வேளை இப்பொழுது போகச் சொல்லிவிட்டு சனிக்கிழமை வரச் சொல்லிவிடுவார்களோ?? ஐயோ வேண்டவே வேண்டாம். இன்னும் 2 1/2 மணி நேரம் தானே இப்படியே ஓட்டிவிடுலாம்.

என்ன நான் சொல்வது சரி தானே??

இண்டர்நெட் இல்லாமல் இந்த பதிவை பதியக் கூட முடியவில்லை. இண்டர்நெட் இல்லாமல் உலகமே இருண்ட மாதிரி இருக்கிறது. என்ன செய்வது?? (!!!)

ஒரு விஷயம் இந்த இண்டர்நெட் இல்லாததால் தான் இன்று என்னால் ஓரு பதிவு எழுத முடிந்தது. எல்லம் நன்மைக்கே..

1 comment:

rishvan said...

... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகி அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...www.rishvan.com