24 December 2014

போ டாடி போ....

           
      அலுவலகம் முடிந்து வந்ததும்  வராததுமாக என் மனைவி எங்கள் மூன்று வயது மகள் அவந்திகாவைப் பற்றி தன் புலம்பலைத் தொடங்கிவிட்டாள்.

இங்க பாரும்மா! அவ குழந்தை. அப்படித்தான் இருப்ப. நாமத் தான் மெதுவாகச் சொல்லி புரிய வைக்கணும்மன்னு சொன்னேன். அதற்கு என் மனைவி, அவளுக்கு வாய் ஜாஸ்தியாயிடுச்சுங்க. மூணு வயசுப் பெண்ணு மாதிரியா பேசுறா? என்னால் முடியாது, முடிந்தால் இன்னக்கி நீங்க அவளுக்கு கதை சொல்லி தூங்கவையுங்க பார்ப்போம்ன்னு சொல்லிட்டுத் தூங்கப் போயிட்டா...

டிவியில் மூழ்கி இருந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு படுக்கைக்குப் போய் கதைச் சொல்லத் தொடங்கினேன். 'ஒரு ஊருல ஒரு பாட்டி..' என்று தொடங்கிய உடனே போர் டாடி எனச் சொன்னாள் என் மகள். சரி என்று 'ஒரு ஊருல ஒரு காக்கா..' என்று தொடங்கிய உடனே மறுபடியும் போர் டாடி எனச் சொன்னாள். சரி என்று எனக்கு என் பாட்டி சொன்ன கதை எல்லாம் சொல்லிவிட்டேன். அனைத்துக்கும் போர் போர் என்று சொன்ன என் மகள், 'போ டாடி போ' இது எல்லாம் பழசுக் கண்ணா பழசு. சுட்டி டிவி, பேபி டிவி பாரு எல்லாக் கதையும் புதுசுக் கண்ணா புதுசு என்று சொன்ன என் மகள் அவந்திகாவையும், என் மனைவியின் புலம்பலையும் நினைத்து திகைத்து நின்றேன்.


No comments: