கி.பி. 1587ல் பாரசீகத்தை ஆண்ட மன்னர் ஷா அப்பாஸ். இவர் ஆட்சியின் போது துருக்கியும் உஸ்பெக்கும் பாரசீகத்தை தாக்கியது. மிகுந்த மன உறுதுயுடன் போராடி வெற்றியும் பெற்றார் ஷா அப்பாஸ். இப்படி தான் பாரசீக சாம்ராஜ்யம் உருவானது. இவர் தான் இஸ்பஹான் நகரை பாரசீகத் தலைநகராக்கியவர். மொகலாயர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில், காபூல் மற்றும் கந்தஹாரை மிகவும் எச்சரிக்கையாகப் பாதுகாத்து வந்தார்கள். காரணம், வெளி நாட்டார் இந்தியா மீது படையெடுத்து வந்தால் இந்த இரு பிரதேசங்களின் வழியே தான் வரவேண்டும் என்பதால் தான் இந்த பாதுகாப்பு.
1607 மார்ச்சில் ஷா அப்பாஸ் இந்தியா மீது படையெடுத்தார். கந்தஹாரில் அவர் படை முகாமிட்டது. அப்போது அங்கு ஜஹாங்கீர் ஆட்சி இருந்தது. ஜஹாங்கீரின் சேனாதிபதி தன் திறமையால் ஷா அப்பாஸின் படைகளை விரட்டியடித்தார். இதையறிந்த ஷா அப்பாஸ், ஜஹாங்கீருக்கு ஓர் ஓலை அனுப்பினார்.
தன் படைகள் ஜஹாங்கீர் மீது படையெடுத்ததை தாம் ஒப்புக் கொள்ளவில்லை என்றும், தமக்குத் தெரியாமல் இது நடந்துவிட்டதாகவும், ஜஹாங்கீருடன் நட்புக் கொள்ளவே தாம் விரும்புவதாகவும், இரண்டு முஸ்லிம் அரசுகளும் சிநேகமுடன் இருப்பதே நல்லது என்றும் சொல்லி ஓலை அனுப்பினாராம்.
இதைக் கேட்ட ஜஹாங்கீர் 'இது ஷா அப்பாஸ் வேலை' என்று சொல்லி மகிழ்ந்தாராம்.
அதாவது தோல்வியைத் தன் சமார்த்தியத்தால் வெற்றியாக மாற்றியவர் ஷா அப்பாஸ். அதன் பிறகு இதைப் போன்ற செயல்களை யார் செய்தாலும் 'ஷ பாஸ்' சொல்வது வழக்கமாகி விட்டது. ' ஷா அப்பாஸ்' என்பது 'ஷபாஸ்' என்று உருதுவில் மாறி, பிறகு 'சபாஷ்' என்று தமிழில் மாறியதாகச் சொல்கிறார்கள்.
அட இது நிஜந்தானா என்று எல்லாம் கேட்கப்படாது. சுவாரஸ்யமாக இருந்தது, அதனால் உங்களிடம் பகிர்ந்துக் கொண்டேன் அம்புட்டுத் தான்.. வரட்டா??
17 May 2008
பத்து மாதக் குழந்தை
சென்னைக்கு நான் பத்து மாதக் குழந்தை. என்ன இதற்கு முன் சென்னைக்கு நீ வந்ததே இல்லையா? என்று கேட்காதீர்கள். அதை நான் கர்பகாலம் என்று தான் சொல்வேன்.(4+6) என கல்லூரி நாட்களிலும், கல்லூரி முடிந்து வேலைத் தேடும் போது என்று பத்து மாதம் இருந்திருப்பேன் கர்பத்தில் உள்ள குழந்தை வயிற்றுனுள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்வதைப் போல நானும் என் சித்தப்பா வீட்டிலும், என் மாமா வீட்டிலும் கொஞ்சம் கொஞ்சம் உறவுகள் பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டேன். உறவுகளிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும். எப்படி நடந்தால் அவர்களுக்கு நல்லவளாக இருப்பேன் என்று கொஞ்சம் கொஞ்சமாக நன்றாகவே கற்றுக் கொண்டேன்.அப்போது நான் கூட்டுப் பறவை. நிறைய கட்டுப்பாடுகள். உடைக்கவும் முடியாது. அதில் சிக்கித் தவிக்கவும் மனம் வராது.
ஆனால் இன்று நான் சுதந்திரப் பறவை. என்னைக் கேட்க யாருமில்லை என்றாலும் நான் வரம்பு மீற நினைத்ததில்லை.ஹாஸ்டல் வாழ்க்கை. வொவ்வொரு மொழி பேசும் பெண்கள். வித்தியாசமான சூழ்நிலை.
நினைத்ததை சுதந்திரமாக இன்று செய்ய முடிகிறது. கார் ஒட்டக் கற்றுக் கொள்ள வேண்டும் என ஆசைப் பட்டேன். அதற்கும் சேர்ந்தாகி விட்டது. இந்த மாத இறுதிக்குள் நிரந்தர உரிம்மும் வாங்கி விடுவேன். நிறைய புத்தகங்கள் படிக்க ஆசை. அதையும் ஆரம்பித்து விட்டேன். ஓவியம் வரையும் எண்ணம் மட்டும் நிறைவேறாமல் இருக்கிறது. ஐ.டி யில் ஐக்கியம் ஆகிவிட்டேன் அல்லவா, அலுவலக நாட்களில் சுத்தமாக நேரம் கிடைக்க மாட்டேங்கிறது. வார இறுதியில் துணி துவைக்கவும், அலமாரியை சீர்படுத்தவும், தேவையானவற்றை வெளியேச் சென்று வாங்கவுமே நேரம் சரியாக உள்ளது.
ஆனாலும் எனக்கு இந்த வாழ்க்கைப் பிடித்திருக்கிறது. என்னாலும் பிறருக்கு உதவ முடிகிறது என்பதாலும், என் அப்பா, அம்மா, தங்கை எல்லோருக்கும் அவர்கள் ஆசைப்படுவதை எல்லாம் வாங்கிக் கொடுக்க முடிகிறது என்பதாலும் எனக்கு இந்த வாழ்க்கைப் பிடித்திருக்கிறது. ஆனால் வீட்டுச் சாப்பாடு மட்டும் எனக்குக் கிடைக்கவே மாட்டேங்கிறது. இந்த ஒன்றைத் தவிர நான் பத்து மாதக் குழந்தையாக நிறைய புதுபுதுப் அனுபவங்களைப் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.
சரி சரி இப்படியே வெட்டிக் கதை பேசிக்கிட்டு இருந்தா வேலையை யார் பார்ப்பது.. என்னபா ரைட்டா?? ஒக்கே அதனால இப்பால ஜீட் விட்டுக்கினு அப்பால வரேன்....
ஆனால் இன்று நான் சுதந்திரப் பறவை. என்னைக் கேட்க யாருமில்லை என்றாலும் நான் வரம்பு மீற நினைத்ததில்லை.ஹாஸ்டல் வாழ்க்கை. வொவ்வொரு மொழி பேசும் பெண்கள். வித்தியாசமான சூழ்நிலை.
நினைத்ததை சுதந்திரமாக இன்று செய்ய முடிகிறது. கார் ஒட்டக் கற்றுக் கொள்ள வேண்டும் என ஆசைப் பட்டேன். அதற்கும் சேர்ந்தாகி விட்டது. இந்த மாத இறுதிக்குள் நிரந்தர உரிம்மும் வாங்கி விடுவேன். நிறைய புத்தகங்கள் படிக்க ஆசை. அதையும் ஆரம்பித்து விட்டேன். ஓவியம் வரையும் எண்ணம் மட்டும் நிறைவேறாமல் இருக்கிறது. ஐ.டி யில் ஐக்கியம் ஆகிவிட்டேன் அல்லவா, அலுவலக நாட்களில் சுத்தமாக நேரம் கிடைக்க மாட்டேங்கிறது. வார இறுதியில் துணி துவைக்கவும், அலமாரியை சீர்படுத்தவும், தேவையானவற்றை வெளியேச் சென்று வாங்கவுமே நேரம் சரியாக உள்ளது.
ஆனாலும் எனக்கு இந்த வாழ்க்கைப் பிடித்திருக்கிறது. என்னாலும் பிறருக்கு உதவ முடிகிறது என்பதாலும், என் அப்பா, அம்மா, தங்கை எல்லோருக்கும் அவர்கள் ஆசைப்படுவதை எல்லாம் வாங்கிக் கொடுக்க முடிகிறது என்பதாலும் எனக்கு இந்த வாழ்க்கைப் பிடித்திருக்கிறது. ஆனால் வீட்டுச் சாப்பாடு மட்டும் எனக்குக் கிடைக்கவே மாட்டேங்கிறது. இந்த ஒன்றைத் தவிர நான் பத்து மாதக் குழந்தையாக நிறைய புதுபுதுப் அனுபவங்களைப் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.
சரி சரி இப்படியே வெட்டிக் கதை பேசிக்கிட்டு இருந்தா வேலையை யார் பார்ப்பது.. என்னபா ரைட்டா?? ஒக்கே அதனால இப்பால ஜீட் விட்டுக்கினு அப்பால வரேன்....
16 May 2008
நோ கவலை ப்ளிஸ்!!
இன்று நம்மில் பலர் நிறைய படித்து, புத்திசாலியாகத் திகழ்கிறார்கள். அப்படிப் பட்டவர்கள் கவலையில் சிக்கித் தவித்தால், அவர்கள் படித்த படிப்பிற்கோ, அவர்களுடைய அறிவிற்கோ எந்தவித பிரயோஜனமும் இல்லை.
வாழ்க்கையில் முன்னேறிய பலருடைய வாழ்க்கையைத் திருப்பிப் பார்த்தால் நமக்கு ஒன்றுத் தெரியும். அவர்கள் தேவையற்ற விஷயங்களுக்கு எல்லாம் கவலைப்பட்டுருக்க மாட்டார்கள் என்று.
கவலை என்பது ஒரு அரக்கனைப் போன்றது. அது நம் மனதுள் புகுந்து விட்டால் பல நல்ல சிந்தனைகள் நம் மனதை விட்டுப் போய் விடும். நல்ல சிந்தனை என்பது தவம் போன்றது. நம் எண்ண அலைகள் பலவிதமாக மாறி இறுதுயில் ஒரு புதிய பரிமணத்தை அடைவது என்ப்து தவத்திற்கு பின் கிடைக்கும் வரம் போன்றது.
நாம் கவலையுடன் இருந்தால் நல்ல சிந்தனை மட்டும்மல்ல, சுய நினைவும், கல்வியால் நாம் பெற்ற அறிவும் கூட வராமல் போய் விடும். நம் லட்சியம் மற்றும் சுயமுயற்சியால் நாம் அடைய வேண்டிய முன்னேற்றத்தை கவலையால் அடையாமலே போய் விடலாம்.
கவலைகள் பலவிதம். அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். நான் ஏதோ கவலையில் இருந்த போது என் நண்பர் எனக்கு கூறிய அறிவுரை இது.
' உனக்காவது உன் கவலை என்னவென்றாவது தெரிந்திருக்கிறது. அதனால் எளிதில் வெளியே வந்து விடலாம்.
ஆனால் நிறைய பேருக்கு அவரகள் எதற்காக கவலைப் படுகிறோம் என்றே தெரியாமல் இருக்கிறார்கள்.
அவர்களை நினைத்துப் பார்த்தாலே உன் கவலை எல்லாம் உனக்கு பெரிதாகத் தெரியாது' என்று...
என்ன என் நண்பரின் கருத்து சரிதானே?
நம் மனம் கவலையைப் போட்டு வைக்கும் குப்பைத் தொட்டிக் கிடையாது.
சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லையென்றால் மனிதற்கு ஏது பலம்
அதனால் தான் சொல்கிறேன். எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள் என்று..
இது எனக்கும் கூட நன்றாகவே பொருந்தும்.
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!!
- பாரதியார்
வாழ்க்கையில் முன்னேறிய பலருடைய வாழ்க்கையைத் திருப்பிப் பார்த்தால் நமக்கு ஒன்றுத் தெரியும். அவர்கள் தேவையற்ற விஷயங்களுக்கு எல்லாம் கவலைப்பட்டுருக்க மாட்டார்கள் என்று.
கவலை என்பது ஒரு அரக்கனைப் போன்றது. அது நம் மனதுள் புகுந்து விட்டால் பல நல்ல சிந்தனைகள் நம் மனதை விட்டுப் போய் விடும். நல்ல சிந்தனை என்பது தவம் போன்றது. நம் எண்ண அலைகள் பலவிதமாக மாறி இறுதுயில் ஒரு புதிய பரிமணத்தை அடைவது என்ப்து தவத்திற்கு பின் கிடைக்கும் வரம் போன்றது.
நாம் கவலையுடன் இருந்தால் நல்ல சிந்தனை மட்டும்மல்ல, சுய நினைவும், கல்வியால் நாம் பெற்ற அறிவும் கூட வராமல் போய் விடும். நம் லட்சியம் மற்றும் சுயமுயற்சியால் நாம் அடைய வேண்டிய முன்னேற்றத்தை கவலையால் அடையாமலே போய் விடலாம்.
கவலைகள் பலவிதம். அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். நான் ஏதோ கவலையில் இருந்த போது என் நண்பர் எனக்கு கூறிய அறிவுரை இது.
' உனக்காவது உன் கவலை என்னவென்றாவது தெரிந்திருக்கிறது. அதனால் எளிதில் வெளியே வந்து விடலாம்.
ஆனால் நிறைய பேருக்கு அவரகள் எதற்காக கவலைப் படுகிறோம் என்றே தெரியாமல் இருக்கிறார்கள்.
அவர்களை நினைத்துப் பார்த்தாலே உன் கவலை எல்லாம் உனக்கு பெரிதாகத் தெரியாது' என்று...
என்ன என் நண்பரின் கருத்து சரிதானே?
நம் மனம் கவலையைப் போட்டு வைக்கும் குப்பைத் தொட்டிக் கிடையாது.
சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லையென்றால் மனிதற்கு ஏது பலம்
அதனால் தான் சொல்கிறேன். எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள் என்று..
இது எனக்கும் கூட நன்றாகவே பொருந்தும்.
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!!
- பாரதியார்
Subscribe to:
Posts (Atom)