27 August 2008

திருமண அழைப்பு

என் மண நாளை என்னை விட அதிக ஆவலுடன்
எதிர்பார்த்து காத்திருக்கும் என்
நண்பர்களுக்கு என் இனிய வணக்கம்.

அனைவரையும் நேரில் அழைக்க ஆசை.

ஆனால்,

நேரம் என் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத காரணத்தால்
பலரின் நண்பராக இருக்கும இந்த கணினியின்
உதவியுடன் உங்களைச் சந்திக்கிறேன்.

இதை நேரடி அழைப்பாக நினைத்து
நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வந்து
என் திருமணத்தையும் (செப்டம்பர் 11) வரவேற்பையும் (செப்டம்பர் 12)
சிறப்பிக்க வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
உங்கள் வரவையும், நட்பையும் என்றும் விரும்பும்

நிவேதிதா....





10 June 2008

தென்னக ரயில்வே - சிறப்பு ரயில்

தென்னக ரயில்வே நிறைய சேவைகளை அறிவித்தாலும், பல இன்னல்களையும் கூடவே தருகிறது. இரயில் நிலையங்களில் இரயில்களின் வருகைப் பற்றி அறிவிப்பார்கள் அல்லாவா.. அதைக் கூட அதிகம் அக்கறை எடுக்காமல் தகவலை சரியாகத் தெரிந்துக் கொள்ளாமல் தப்பும் தவறுமாக அறிவிக்கிறார்கள். இரயில் இந்த பிளாட்பாரத்தில் வரும் என்று சொல்விட்டு மாற்றுவது. இதாவது சிறப்பு ரயில் என்பதால் சகித்துக் கொள்ளலாம். ஆனால் வராத ஒரு இரயில் வந்து விட்டதாகத் திரும்பத் திரும்ப அறிவித்து மக்களைக் குழப்பி அவர்களை அலைக்கழிப்பது என்பது தண்டிக்கத் தக்க, வருந்த தக்க ஒன்று. முதியோர், உடல் ஊனமுற்றோர், குழந்தைகள் என வரும் இம்மாதிரி இடங்களில் இப்படி பொறுப்பில்லாமல் நடந்துக் கொள்வது கண்டிக்கப் பட வேண்டிய ஒன்று. சம்பந்தப் பட்டவர்கள் யோசிப்பார்களா??

மேலும் சிறப்பு ரயில் என்று விடுகிறார்கள். அதில் சிறப்பு என்னவென்றால் நாம் எப்படியும் ஊர் போய் சேர்ந்து விடுவோம் என்பது மட்டுமே.. எப்பொழுது வரும். தெரியாது. வர வேண்டிய நேரத்தில் இருந்து 2 அல்லது 3 மணி நேரத்திற்குள் வரலாம். சரி எப்பொழுது போய் சேரும்.. சேர வேண்டிய நேரத்திற்கு 3 அல்லது 4 மணி நேரத்திற்குள் சேரலாம். எதிரே வரும் அனைத்து இரயிலையும் வரவேற்று வழியனுப்பி.. இதை நம்பி நாம் எப்படி அலுவலகம் போவது. எத்தனைப் பேர் எத்தனை அவசர வேலையை வைத்துக் கொண்டு இரயில் ஏறி இருப்பார்கள். எத்தனைப் பேர் அலுவலகம் செல்ல வேண்டியிருக்கும். அத்தனையும் இவர்களின் திட்டமின்மையால் வீணாகி விடுகிறது. மக்கள் அல்லல் படுவதும் அவதிப்படுவதும் தான் மிச்சம்.

ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி இரவு 8:30 க்கு கிளம்பி, காலை 4:15 க்கு சென்னை வந்து சேர வேண்டியது, எல்லா இரயிலுக்கும் வழி விட்டு காலை 10:30 க்கு சென்னையை அடைந்து, அங்கிருந்து நான் என் இருப்பிடம் வந்து அடைந்தப் போது மணி மதியம் 12:45.. அதற்குப் பின் நான் தயாராகி எங்கே அலுவலகம் போவது. ஒரு நாள் தேவையே இல்லாமல் ஒரு விடுமுறை வீணானது மட்டும் இல்லாமல், எத்தனை அசவ்ரியங்களை எதிர் கொள்ள வேண்டியதாகி விட்டது. இரயில்வே நிர்வாகம் கொஞ்சம் யோசித்தால் நன்றாக இருக்கும். யோசிப்பார்களா???

03 June 2008

கடிகாரம்

என் கட்டுப்பாட்டிற்க்குள் இருக்க வேண்டியவன் நீ
என் கட்டுப்பாட்டை மீற என்ன தைரியம் உனக்கு!