31 March 2008

கண்ணாடி உறவுகள்!!

உறவுகளை கண்ணாடியுடன் ஒப்புடுவார்கள்!!
அது நம்மை பிரிதிபலிப்பதால் மட்டும் அல்ல!!
எளிதில் உடையக்குடியதும் என்பதால்!!

உறவுகள் பல வகை இருந்தாலும்
உணர்வுகள் பல நேரங்களில்,
பல விஷயங்களில் ஒன்றாகவே இருக்கிறது!!

எந்த ஒரு உறவையுமே
எவர் ஒருவரின் வற்புருத்தலின் போரிலும்
நம்முள் திணிக்க முடியாது!!

அவர் அவர் குணங்களை
அப்படியே ஏற்றுக் கொள்ளும்
மனம் இருந்தால்
அந்த உறவு நம்மை பிரிதிபலிப்பதாக இருக்கும்..

இல்லை என்றால்,
கண்ணாடியின் இரண்டாம் நிலை தான்..
ஆம் உறவு உடைந்து கூட போகலாம்!!