17 May 2008

சபாஷ் பிறந்தக் கதை!!

கி.பி. 1587ல் பாரசீகத்தை ஆண்ட மன்னர் ஷா அப்பாஸ். இவர் ஆட்சியின் போது துருக்கியும் உஸ்பெக்கும் பாரசீகத்தை தாக்கியது. மிகுந்த மன உறுதுயுடன் போராடி வெற்றியும் பெற்றார் ஷா அப்பாஸ். இப்படி தான் பாரசீக சாம்ராஜ்யம் உருவானது. இவர் தான் இஸ்பஹான் நகரை பாரசீகத் தலைநகராக்கியவர். மொகலாயர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில், காபூல் மற்றும் கந்தஹாரை மிகவும் எச்சரிக்கையாகப் பாதுகாத்து வந்தார்கள். காரணம், வெளி நாட்டார் இந்தியா மீது படையெடுத்து வந்தால் இந்த இரு பிரதேசங்களின் வழியே தான் வரவேண்டும் என்பதால் தான் இந்த பாதுகாப்பு.

1607 மார்ச்சில் ஷா அப்பாஸ் இந்தியா மீது படையெடுத்தார். கந்தஹாரில் அவர் படை முகாமிட்டது. அப்போது அங்கு ஜஹாங்கீர் ஆட்சி இருந்தது. ஜஹாங்கீரின் சேனாதிபதி தன் திறமையால் ஷா அப்பாஸின் படைகளை விரட்டியடித்தார். இதையறிந்த ஷா அப்பாஸ், ஜஹாங்கீருக்கு ஓர் ஓலை அனுப்பினார்.

தன் படைகள் ஜஹாங்கீர் மீது படையெடுத்ததை தாம் ஒப்புக் கொள்ளவில்லை என்றும், தமக்குத் தெரியாமல் இது நடந்துவிட்டதாகவும், ஜஹாங்கீருடன் நட்புக் கொள்ளவே தாம் விரும்புவதாகவும், இரண்டு முஸ்லிம் அரசுகளும் சிநேகமுடன் இருப்பதே நல்லது என்றும் சொல்லி ஓலை அனுப்பினாராம்.

இதைக் கேட்ட ஜஹாங்கீர் 'இது ஷா அப்பாஸ் வேலை' என்று சொல்லி மகிழ்ந்தாராம்.

அதாவது தோல்வியைத் தன் சமார்த்தியத்தால் வெற்றியாக மாற்றியவர் ஷா அப்பாஸ். அதன் பிறகு இதைப் போன்ற செயல்களை யார் செய்தாலும் 'ஷ பாஸ்' சொல்வது வழக்கமாகி விட்டது. ' ஷா அப்பாஸ்' என்பது 'ஷபாஸ்' என்று உருதுவில் மாறி, பிறகு 'சபாஷ்' என்று தமிழில் மாறியதாகச் சொல்கிறார்கள்.

அட இது நிஜந்தானா என்று எல்லாம் கேட்கப்படாது. சுவாரஸ்யமாக இருந்தது, அதனால் உங்களிடம் பகிர்ந்துக் கொண்டேன் அம்புட்டுத் தான்.. வரட்டா??

பத்து மாதக் குழந்தை

சென்னைக்கு நான் பத்து மாதக் குழந்தை. என்ன இதற்கு முன் சென்னைக்கு நீ வந்ததே இல்லையா? என்று கேட்காதீர்கள். அதை நான் கர்பகாலம் என்று தான் சொல்வேன்.(4+6) என கல்லூரி நாட்களிலும், கல்லூரி முடிந்து வேலைத் தேடும் போது என்று பத்து மாதம் இருந்திருப்பேன் கர்பத்தில் உள்ள குழந்தை வயிற்றுனுள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்வதைப் போல நானும் என் சித்தப்பா வீட்டிலும், என் மாமா வீட்டிலும் கொஞ்சம் கொஞ்சம் உறவுகள் பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டேன். உறவுகளிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும். எப்படி நடந்தால் அவர்களுக்கு நல்லவளாக இருப்பேன் என்று கொஞ்சம் கொஞ்சமாக நன்றாகவே கற்றுக் கொண்டேன்.அப்போது நான் கூட்டுப் பறவை. நிறைய கட்டுப்பாடுகள். உடைக்கவும் முடியாது. அதில் சிக்கித் தவிக்கவும் மனம் வராது.

ஆனால் இன்று நான் சுதந்திரப் பறவை. என்னைக் கேட்க யாருமில்லை என்றாலும் நான் வரம்பு மீற நினைத்ததில்லை.ஹாஸ்டல் வாழ்க்கை. வொவ்வொரு மொழி பேசும் பெண்கள். வித்தியாசமான சூழ்நிலை.

நினைத்ததை சுதந்திரமாக இன்று செய்ய முடிகிறது. கார் ஒட்டக் கற்றுக் கொள்ள வேண்டும் என ஆசைப் பட்டேன். அதற்கும் சேர்ந்தாகி விட்டது. இந்த மாத இறுதிக்குள் நிரந்தர உரிம்மும் வாங்கி விடுவேன். நிறைய புத்தகங்கள் படிக்க ஆசை. அதையும் ஆரம்பித்து விட்டேன். ஓவியம் வரையும் எண்ணம் மட்டும் நிறைவேறாமல் இருக்கிறது. ஐ.டி யில் ஐக்கியம் ஆகிவிட்டேன் அல்லவா, அலுவலக நாட்களில் சுத்தமாக நேரம் கிடைக்க மாட்டேங்கிறது. வார இறுதியில் துணி துவைக்கவும், அலமாரியை சீர்படுத்தவும், தேவையானவற்றை வெளியேச் சென்று வாங்கவுமே நேரம் சரியாக உள்ளது.

ஆனாலும் எனக்கு இந்த வாழ்க்கைப் பிடித்திருக்கிறது. என்னாலும் பிறருக்கு உதவ முடிகிறது என்பதாலும், என் அப்பா, அம்மா, தங்கை எல்லோருக்கும் அவர்கள் ஆசைப்படுவதை எல்லாம் வாங்கிக் கொடுக்க முடிகிறது என்பதாலும் எனக்கு இந்த வாழ்க்கைப் பிடித்திருக்கிறது. ஆனால் வீட்டுச் சாப்பாடு மட்டும் எனக்குக் கிடைக்கவே மாட்டேங்கிறது. இந்த ஒன்றைத் தவிர நான் பத்து மாதக் குழந்தையாக நிறைய புதுபுதுப் அனுபவங்களைப் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.

சரி சரி இப்படியே வெட்டிக் கதை பேசிக்கிட்டு இருந்தா வேலையை யார் பார்ப்பது.. என்னபா ரைட்டா?? ஒக்கே அதனால இப்பால ஜீட் விட்டுக்கினு அப்பால வரேன்....

16 May 2008

நோ கவலை ப்ளிஸ்!!

இன்று நம்மில் பலர் நிறைய படித்து, புத்திசாலியாகத் திகழ்கிறார்கள். அப்படிப் பட்டவர்கள் கவலையில் சிக்கித் தவித்தால், அவர்கள் படித்த படிப்பிற்கோ, அவர்களுடைய அறிவிற்கோ எந்தவித பிரயோஜனமும் இல்லை.

வாழ்க்கையில் முன்னேறிய பலருடைய வாழ்க்கையைத் திருப்பிப் பார்த்தால் நமக்கு ஒன்றுத் தெரியும். அவர்கள் தேவையற்ற விஷயங்களுக்கு எல்லாம் கவலைப்பட்டுருக்க மாட்டார்கள் என்று.

கவலை என்பது ஒரு அரக்கனைப் போன்றது. அது நம் மனதுள் புகுந்து விட்டால் பல நல்ல சிந்தனைகள் நம் மனதை விட்டுப் போய் விடும். நல்ல சிந்தனை என்பது தவம் போன்றது. நம் எண்ண அலைகள் பலவிதமாக மாறி இறுதுயில் ஒரு புதிய பரிமணத்தை அடைவது என்ப்து தவத்திற்கு பின் கிடைக்கும் வரம் போன்றது.

நாம் கவலையுடன் இருந்தால் நல்ல சிந்தனை மட்டும்மல்ல, சுய நினைவும், கல்வியால் நாம் பெற்ற அறிவும் கூட வராமல் போய் விடும். நம் லட்சியம் மற்றும் சுயமுயற்சியால் நாம் அடைய வேண்டிய முன்னேற்றத்தை கவலையால் அடையாமலே போய் விடலாம்.

கவலைகள் பலவிதம். அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். நான் ஏதோ கவலையில் இருந்த போது என் நண்பர் எனக்கு கூறிய அறிவுரை இது.

' உனக்காவது உன் கவலை என்னவென்றாவது தெரிந்திருக்கிறது. அதனால் எளிதில் வெளியே வந்து விடலாம்.

ஆனால் நிறைய பேருக்கு அவரகள் எதற்காக கவலைப் படுகிறோம் என்றே தெரியாமல் இருக்கிறார்கள்.

அவர்களை நினைத்துப் பார்த்தாலே உன் கவலை எல்லாம் உனக்கு பெரிதாகத் தெரியாது' என்று...

என்ன என் நண்பரின் கருத்து சரிதானே?

நம் மனம் கவலையைப் போட்டு வைக்கும் குப்பைத் தொட்டிக் கிடையாது.

சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லையென்றால் மனிதற்கு ஏது பலம்

அதனால் தான் சொல்கிறேன். எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள் என்று..
இது எனக்கும் கூட நன்றாகவே பொருந்தும்.

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!!

- பாரதியார்

04 May 2008

கோபமும் வீரமும் வேறு படுவது எங்கே?

விகடன் பிரசுரத்தில் வெளிவந்துள்ள செங்கோட்டை ஸ்ரீராம் எழுதிய 'மறந்து போன பக்கங்கள்' நூலைப் படித்தேன்..

ஒவ்வொரு விஷயத்தையும் நம் அனுபவத்தால் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கு நம் வாழ்நாள் முழுதும் கூட போதாமல் போகலாம். ஆனால் அதையே அனுபவம் பெற்ற பல பெரியவர்களிடமிருந்து பெற்றால் குறைந்த காலத்தில் நிறைய அனுபவங்களைத் தெரிந்துக் கொள்ளலாம். ஆனால் கையைச் சுடும் என்றாலும் தீயைத் தொட்டுப் பார்த்து ஆமாம் 'சரி தான், சுடுகிறது என்று சொல்லும் ஆசாமிகள் ஆயிற்றே நாம்!!

இதை ஏன் சொல்கிறேன் என்றால் நான் மிக எளிதில் கோப்ப்படக்கூடிய பெண் நான். கோபத்தில் என்ன சொல்கிறேன், என்ன செய்கிறேன் என்று தெரியாமல் எதையாவது செய்து விட்டு பின் வருத்தப்படுவேன். பெற்றோரும், நண்பர்களும் சொல்லி இப்போது கோபத்தை கட்டுப்படுத்தக் கற்றுக் கொண்டுருக்கிறேன். நான் கோபத்தில் எதையாவது சொல்லிவிட்டு 5 அல்லது 10 கழித்து நான் யோசிக்க ஆரம்பிக்கும் பொழுது தான் என் தவறு எனக்கு உறைக்கும். உடனே சம்பந்தபட்டவர்களிடம் 'சாரி கேட்டுக் கெஞ்சி அவர்களை சமாதனப்படுத்திவிடுவேன். அவர்கள் அப்போது சமதானம் ஆனாலும் அவரகள் மனதில் அந்த வடு இருக்கத் தானே செய்யும். இந்தக் கட்டுரையை படிக்கும் போது தான் என் மரமண்டையில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது.

சுவாமி விவேகனந்தரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் சிஷ்யையின் பெயரை எனக்கு வைத்ததால், அவர் எனக்குச் சிறு வயதிலேயே அவர் அறிமுகம் ஆகிவிட்டார். பள்ளி நாட்களில் பேச்சுப் போட்டியில் அவரைப் பற்றி பேசி பல முதல் பரிசிகளைப் பெற்று இருக்கிறேன்.

அவர் கோபத்தைப் பற்றி சொல்லும் போது 'பலமே வாழ்வு, பலவீனமே மரணம்' என்று ஒரே வாக்கியத்தில் சொல்லிவிட்டார். அதாவது வீரம் நெஞ்சில் இருக்கும் போது தானே வெளித்தெரிகிறது. அந்த வீரம் எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும். கொடியவர்களை வீழ்த்தவும், நல்லவர்களுக்கு உதவுவதாகவும் இருக்க வேண்டும். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் இன்றைய தமிழ்ப் பட ஹீரோக்களின் கோபம் போன்று இருக்க வேண்டும்.

நம் வாழ்க்கையில் 10 சதவீதம் நமக்கு என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்தது. மீதி 90 சதவீதம் நாம் அந்த நேரத்தில் எப்படி நடந்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது.

உதாரணத்திற்கு, காலையில் அம்மாவோ, தங்கையோ, மனைவியோ தேநீர் கொண்டு வரும் பொழுது கைத் தவறி சட்டையில் கொட்டி விடுகிறது. இது என்ன அவர்கள் வேண்டும் என்றா செய்தார்கள். தெரியாமல் நடந்து விட்டது. இதை நாம் இரண்டு முறைகளில் கையாளலாம். ஒன்று, கொட்டியவரைத் திட்டுவது. மற்றொன்று 'பரவாயில்லை, தெரியாமல் தானே கொட்டி விட்டது' என்று சொல்லி வேறு சட்டையை மாற்றிக் கொள்ளவது.

இதில் முதல் ஒன்று, அன்றையப் பொழுதை நீங்களாகவே கெட்டப் பொழுதாக்கிக் கொள்ளவதாகி விடும். மற்றொன்று அன்றைய பொழுது இன்னும் நல்ல பொழுதாகி அவரகள் அன்பு கூடவும் வாய்ப்பளிக்கும்.. இதில் எது நல்லது என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

வாரியார் சுவாமிகளும் கோபத்தைப் பற்றி இப்படிக் கூறியிருக்கிறார்.

'சூடான பால் ஆற வேண்டும் என்றால் அதை வேறு பாத்திரத்தில் மாற்றி ஆற்ற வேண்டும்'. அதுப் போல சூடான சூழ்நிலையில் உங்கள் மனம் சலனமுற்றால் அந்த இடத்தை விட்டு அகன்று விட வேண்டும்.

சரி, இது நம்மை பிறர் கோபப்படுத்தும் போது செய்ய வேண்டியது. ஆனால் நாமும் பிறரைக் கோபப்படுத்துவது போல் ஆகிவிடுகிறதே அப்பொழுது என்ன செய்யவது? அதற்கும் ஒரு வழி சொல்கிறார்.

உலகில் மிக நல்லவன் என்றும், மிகக் கொட்டவன் என்றும் யாரும் இலர். அனைவருக்கும் இரண்டும் கலந்தே இருக்கும். இரண்டையும் தெரிந்துக் கொண்டு ஒருவனின் குற்றங்களை வாய் விட்டு சொல்லாமலும், குணங்களை பாராட்டவும் செய்தால் மற்றவரைக் கோபப்படுத்துவதில் இருந்தும் நாம் தப்பித்து விடலாம்.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

இது வள்ளுவன் குறள்.

பின் வருவது இந்த நூல் ஆசிரியரின் குரல்.

இனத்தை சுகத்தை இனிதாய் விரும்பின்
சினத்தை அடக்கல் சிறப்பு.

என் நண்பர் இதற்காக எனக்குச் சொன்ன அறிவரை,

நான்கு அறிவாளிகள் மத்தியில் நாம் ஒரு அறிவாளியாக நடந்துக் கொள்வது,
நான்கு பைத்தியங்களுக்கு மத்தியில் நாம் ஒரு பைத்தியமாக நடந்துக் கொள்வது,

இப்படிச் செய்தால் பிரச்சனை வராதே!!
பிரச்சனை இல்லாவிட்டால், அங்கே கோபத்திற்கு என்ன வேலை???

என்ன சரி தானே??