10 June 2008

தென்னக ரயில்வே - சிறப்பு ரயில்

தென்னக ரயில்வே நிறைய சேவைகளை அறிவித்தாலும், பல இன்னல்களையும் கூடவே தருகிறது. இரயில் நிலையங்களில் இரயில்களின் வருகைப் பற்றி அறிவிப்பார்கள் அல்லாவா.. அதைக் கூட அதிகம் அக்கறை எடுக்காமல் தகவலை சரியாகத் தெரிந்துக் கொள்ளாமல் தப்பும் தவறுமாக அறிவிக்கிறார்கள். இரயில் இந்த பிளாட்பாரத்தில் வரும் என்று சொல்விட்டு மாற்றுவது. இதாவது சிறப்பு ரயில் என்பதால் சகித்துக் கொள்ளலாம். ஆனால் வராத ஒரு இரயில் வந்து விட்டதாகத் திரும்பத் திரும்ப அறிவித்து மக்களைக் குழப்பி அவர்களை அலைக்கழிப்பது என்பது தண்டிக்கத் தக்க, வருந்த தக்க ஒன்று. முதியோர், உடல் ஊனமுற்றோர், குழந்தைகள் என வரும் இம்மாதிரி இடங்களில் இப்படி பொறுப்பில்லாமல் நடந்துக் கொள்வது கண்டிக்கப் பட வேண்டிய ஒன்று. சம்பந்தப் பட்டவர்கள் யோசிப்பார்களா??

மேலும் சிறப்பு ரயில் என்று விடுகிறார்கள். அதில் சிறப்பு என்னவென்றால் நாம் எப்படியும் ஊர் போய் சேர்ந்து விடுவோம் என்பது மட்டுமே.. எப்பொழுது வரும். தெரியாது. வர வேண்டிய நேரத்தில் இருந்து 2 அல்லது 3 மணி நேரத்திற்குள் வரலாம். சரி எப்பொழுது போய் சேரும்.. சேர வேண்டிய நேரத்திற்கு 3 அல்லது 4 மணி நேரத்திற்குள் சேரலாம். எதிரே வரும் அனைத்து இரயிலையும் வரவேற்று வழியனுப்பி.. இதை நம்பி நாம் எப்படி அலுவலகம் போவது. எத்தனைப் பேர் எத்தனை அவசர வேலையை வைத்துக் கொண்டு இரயில் ஏறி இருப்பார்கள். எத்தனைப் பேர் அலுவலகம் செல்ல வேண்டியிருக்கும். அத்தனையும் இவர்களின் திட்டமின்மையால் வீணாகி விடுகிறது. மக்கள் அல்லல் படுவதும் அவதிப்படுவதும் தான் மிச்சம்.

ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி இரவு 8:30 க்கு கிளம்பி, காலை 4:15 க்கு சென்னை வந்து சேர வேண்டியது, எல்லா இரயிலுக்கும் வழி விட்டு காலை 10:30 க்கு சென்னையை அடைந்து, அங்கிருந்து நான் என் இருப்பிடம் வந்து அடைந்தப் போது மணி மதியம் 12:45.. அதற்குப் பின் நான் தயாராகி எங்கே அலுவலகம் போவது. ஒரு நாள் தேவையே இல்லாமல் ஒரு விடுமுறை வீணானது மட்டும் இல்லாமல், எத்தனை அசவ்ரியங்களை எதிர் கொள்ள வேண்டியதாகி விட்டது. இரயில்வே நிர்வாகம் கொஞ்சம் யோசித்தால் நன்றாக இருக்கும். யோசிப்பார்களா???

03 June 2008

கடிகாரம்

என் கட்டுப்பாட்டிற்க்குள் இருக்க வேண்டியவன் நீ
என் கட்டுப்பாட்டை மீற என்ன தைரியம் உனக்கு!

உன்னை நினைக்கையில்

உன்னை நினைக்கையில் எனக்கு
கவிதை கூட வருகிறது
உன்னை நினைக்கையில் எனக்கு
கத்திரி வெயில் கூட குளிர்கிறது
உன்னை நினைக்கையில் எனக்கு
வாழக் கூட பிடிக்கிறது
உன்னை நினைக்கையில் எனக்கு
சாதிக்கக் கூட தோன்றுகிறது
உன்னை நினைக்கையில் எனக்கு
எல்லாமே பிடிக்கிறது
ஆனால் உனக்கோ
என்னை நினைக்கையில் எரிச்சல் மட்டுமே வருகிறது

என்னக் கொடுமை சார் இது!!!

லைசன்ஸ் வாங்கியாச்சா??

ஒரு வழியா நானும் கார் ஓட்டக் கத்துக்கிட்டு லைசன்ஸ் வாங்கியாச்சு!!

முன்னல்லாம் LLR வாங்க RTO ஆபிஸ் போனா ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்துபவர்களோ இல்லை மற்றவரிடமோ கேட்டு LLR தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை அளிப்பார்கள்.. ஆனால் இப்போது அது எல்லாம் முடியாது. தற்போது LLRக்கு ஆன்லைன் தேர்வு முறை வந்து விட்டது. அதாவது LLR வாங்கும் நபர் தானே கணிணியின் முன் அமர்ந்து அவருக்குக் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும். முன்னே எழுதியவரிடம் எல்லாம் கேட்க முடியாது. ஆமாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கேள்வி அல்லவா இருக்கும். அதனால் கேட்டு எல்லாம் எழுத முடியாது.சாலை விதிகள் தெரிந்திருந்தால் மட்டுமே LLR. அதுவும் 10 கேள்விகளில் 8 கேள்விக்காவது சரியாக விடை அளித்திருக்க வேண்டும்.இந்த முறையை நான் வரவேற்கிறேன். ஆமாம் மக்கள் இதற்காகவாவது சாலை விதிகளை அறிந்துக் கொள்வார்களே!! நானும் இரு சக்கர வாகனத்திற்கு லைசன்ஸ் வாங்க வேண்டும். அதனால் தான் சாலை விதிகளைத் தேடித் தேடிப் படித்துக் கொண்டுருக்கிறேன்.

இந்த இரு சக்கர வாகனங்களுக்கு 8 போடச் சொல்வது போல் நான்கு சக்கர வாகனத்திற்கு 'H' போட சொன்னால் எவ்வளவு நன்றாக இருக்கும். கேரளாவில் உள்ள இந்த முறையைத் தமிழ் நாட்டிலும் பின்பற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும். முறைக்காதீர்கள் 'H' போடுவது கஷ்டம் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இப்பொழுது தேர்வு எப்படி நடக்கிறது தெரியுமா?

தேர்வு நடப்பது பீச் ரோட்டில். நல்ல நீளமான ரோடு. ஒரு தடவைக்கு 4 நபர்களை ஏற்றுக் கொள்கிறார்கள். இதில் நீங்கள் முதல் மூன்று பேரில் நீங்கள் ஒருவராக இருந்தால் கவலையே இல்லை உங்களுக்கு. ஆமாம் நீங்கள் வண்டியை முதல் கியரில் கிளப்பி, 2, 3, 4 என மாற்றி ஓட்டிக் காண்பித்தாலே போதும். லைசன்ஸ் உறுதி. ஆனால் இந்த நான்காம் நபரின் நிலமை தான் கொஞ்சம் கஷ்டம்.

ஆமாம் மூன்று பேர் ஆளுக்கு 3 அல்லது 4 நிமிடம் ஓட்டி இருந்தாலும் வண்டி ஒரு கட்டத்தில் திருப்பும் கட்டாயத்திற்கு வந்து விடும் அல்லவா? அதனால் மாட்டப் போவது அந்த நான்காவது நபராகத் தானே இருக்கும். கிளட்சு, பிரேக் போட்டு வண்டியை நிறுத்தி, முதல் கியர் போட்டு, ஸ்டியரிங்கை வலப் பக்கம் திருப்பி, கிளட்சிலேயே வண்டியை சிறுது தூரம் நகர்த்தி, பின் ரிவர்ஸ் கியர் போட்டு அப்பா சாமி எழுதுறப்போவே கண்ணக்கட்டுதே......

இதை வைத்து அவர்கள் எப்படித்தான் முடிவு செய்கிறார்களோ, தெரியவில்லை. அந்த மூன்று பேருக்கும் இதில் தகராறு இருக்கும் பட்சத்தில் நிலமை என்னாகும்?? சரி இப்ப என்ன ஆச்சு?? ஏன் இப்படி புலம்புகிறேன்னு கேட்பது காதில் விழுகிறது. அந்த நான்காம் நபர் நான் தான். :)

போராட்டமே வாழ்கையாகி விட்டது. எதுவும் எனக்கு போராடாமல் கிடைத்ததில்லை. ஆனாலும் இந்த போராட்டம் எனக்குப் பிடித்திருக்கிறது.

கஷ்டப் படாமல் கிடைப்பது என்றும் நிலைக்காது.
கஷ்டப்பட்டு அடைவது என்றும் நம்மை விட்டுப் போகாது அல்லவா..

விடாமல் முயன்றுக் கொண்டேயிருங்கள் நிச்சயம் ஒரு நாள் வெற்றிக் கிட்டும்...

01 June 2008

உறவு மேம்பட.....

1. நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற எண்ணத்தை , அகந்தையை விட வேண்டும் (Ego)
2. தேவை இல்லாதவற்றை பேசுவதை நிறுத்த வேண்டும் (Loose Talk)
3. பிரச்சனைகளை எளிமையாக கையாள வேண்டும் (Diplomacy), விட்டுக் கொடுத்து பழக வேண்டும் (Compromise)
4. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத் தான் ஆக வேண்டும் (Tolerance)
5. நேரம் காலம் அறியாமல் எல்லோரிடமும், தேவையோ, தேவை இல்லையோ சில விஷயங்களைச் சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள்.
6. பிடிவாதத்தை விட்டு விடுங்கள் (Flexibility)
7. மற்றவர்களுக்கு மரியாதைக் காட்டவும், இனிமையாக பேசவும் மறக்காதீர்கள் (Courtesy)
8. மற்றவர்களை பார்க்கும் போது புன்னகைக்கவும், பேசவும் கூட நேரம் இல்லாதது போல் நடிக்காதீர்கள்.
9. பிரச்சனையின் போது மற்றவர் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று எண்ணாமல், நீங்களே முதலில் விட்டுக் கொடுத்து விடுங்கள்.


- போனால் போகட்டும்...............
கொண்டாடுவோம்............... நூலில்....

ஓஷோவின் அனுபவங்களிலிருந்து சில....

முயன்று தான் பாருங்களேன்!!