26 December 2014

மூடு வாயை!


                லிங்கா படம் பார்க்க நான் என் மனைவியையும், என் மகள் அவந்திகாவையும் அழைத்துக் கொண்டு பஸ்ஸில் ஏறினேன். பஸ்ஸில் நல்ல கூட்டம்.

                இப்பொழுது தான் பேசத் தொடங்கியிருக்கும் என் மகள் வாய் ஓயாமல் கேள்விகள் கேட்டுக் கொண்டும், பேசிக் கொண்டும் வந்தாள்நிற்கக் கூட இடம் இல்லாமல் அவளையும் தூக்கிக் கொண்ட நின்ற எனக்கு என் மகளின் மழலைப் பேச்சு பிடித்திருந்தாலும் கூட்ட நெரிசலில் அவள் பேச்சு என்னைக் கோபப்படுத்தி, என் மகளைப் பார்த்து, 'படம் பார்த்து வீடு திரும்பும் வரை வாயேத் திறக்கக் கூடாது. மூடு வாயை! திறந்தே அவ்வளவு தான் ' என்றேன் சற்று கோபமாக. சிறிது தூரம் சென்றதும் ஏதோ சொல்ல வந்த என் மகளை என் கோபப் பார்வைத் தடுத்து நிறுத்தியது.

                இரண்டு நிறுத்தம் சென்றதும் அமர இடம் கிடைத்தது. அப்பொழுது தான் கவனித்தேன் என் மகள் அணிந்திருந்த அரை சவரன்  மேதிரத்தைக் காணவில்லை என்று. பஸ்ஸில் கீழே விழுந்து விட்டதோ என்று தேடினோம். ஆனால் கிடைக்கவில்லை.

                என் மகளிடம் மோதிரம் எங்கே? என்று கேட்க அவள் வாயைத் திறக்கவில்லை. வாயைத் திறந்து சொல்லு என்று நான் அதட்ட, 'நீங்க தானே வாயைத் திறந்தா அடிப்பேன்னு சென்னீங்க. அந்த அங்கிள் என் மேதிரத்தை எடுத்துட்டுப் போயிட்டாரு' ன்னு மழலையில் சொன்ன என் மகளைப் பார்த்து  வாய் மூடி நின்றேன்.


                லிங்காவால் 40 கோடி நஷ்டம் என்பது உண்மையோ இல்லையோ எனக்கு (என் வார்த்தையால்) அரை சவரன் நஷ்டம் உண்மைங்க!!

2 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

என்னங்க திருடனை "அங்கிள்" என்கிறவே உங்க குழந்தை!
நாம் ஊழல்வாதிகளை முதலமைச்சர், மந்திரி, ஆபீசர் என்பது போலா...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பூமராங்
கதை சூப்பர்.