15 October 2006

ஸ்வரங்கள்!!

பாட்டு எனக்கு மிகவும் பிடித்த விஷயம்!!இசையை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்பொழுதும் உண்டு.நான் அறிந்த சிலவற்றை என் இணையத்தில் பதிவு செய்யப் போகிறேன். பிழையிருந்தால் தெரிவியுங்கள்.
இன்றைய தலைமுறையினர் நிறைய பேர் நன்றாக பாடுறாங்க!!பாட்டுன்னா அதுல நிறைய வகை இருக்குல்ல - கர்நாடக சங்கீதம், இன்னிசை, நாட்டுப் புறப்பாட்டுனு நிறைய வகை.

இன்னிக்கி நாம எல்லோரும் எதாவது பாட்டை முணுமுணுத்திக்கிட்டே இருக்கிற மாதிரியான நிறைய வாய்ப்புக்கள் இருக்கு.அவ்வளவு ஏன் என் ஆபிஸில எப்பவும் பாட்டு ஒடிக்கிட்டே இருக்கும். பாட்டு இல்லாம ஆபிஸில சில பேருக்கு புரோகிராம்எழுத கூட முடியாது. காலையில ஆபிஸ் வந்த உடனே அவங்க தேடுறது ஹெட் போனைத் தான். அந்த அளவுக்கு இசை அவங்க புரோகிராம் கோடிங்கிளேயும் கலந்து விட்டது.

இசை - இது எதை வேண்டும்னாலும் செய்யும். என் போன்ற அமைதியானவர்களையும்(!!) பேச வைக்கும் சக்தி இந்த இசைக்கு உண்டு.

நாம சாதாரணமா ஒரு பாட்டை பாடும் போது சில நேரம் நமக்கே தெரிஞ்சுடும் இந்த பாட்டு நமக்கு வருமா - வராதான்னு! சில நேரம், நம்ம பாட்டு கேட்டு நமக்கே தோணும், நாம எஸ்.பி.பி. இல்ல ஜானகி அம்மா மாதிரி பாடுறோமோன்னு.ஆனா, அதே பாட்ட நல்ல பாடத் தெரிஞ்சவங்க முன்னாடி பாடும் போது சில நேரம் அவங்க அலட்சியமா இந்த பாட்டு உங்களுக்குவருமான்னு நாம பாட ஆரம்பிச்ச அடுத்த நொடியே கேட்பாங்க. நமக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கும். எப்படித் தான் கண்டு பிடிக்கிறாங்களோன்னு!! இது கண்டு பிடிக்கிறது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல. இதுக்கு தேவை ஸ்வரம் பத்தின கொஞ்சம் அறிவு.இந்த 7 ஸ்வரங்களை பிரித்து பார்க்க தெரிந்தால் போதும் ஸ்ருதியை எளிதில் பிடித்து விடலாம். இதுக்கு இசையை முறைப்படி கத்துக்கணும்னு இல்ல. உதாரணத்துக்கு, எஸ்.பி.பி.. அவர் இசையை முறைப்படி கத்துக்கல. இருந்தாலும் அவரால் பாட முடிகிறதே!

அதனால, இத தெரிஞ்சிக்க நாம வீட்டுல கத்தியெ, அறிவாளெ எப்படி கூர்மையாக்குறாங்களொ அது மாதிரி நம்ம காதை கொஞ்சம் கூர்மையாக்கிக்கணும் அவ்வளவு தான். நாம இந்த ஸ்வரத்தை தெரிஞ்சிக்கிட்டா போதும் எதை வேண்டுமானாலும் பாடி விடலாம்.அதே மாதிரி, பாட குரல் ஒன்றும் முக்கியமில்லை. உதாரணத்துக்கு, நித்திய ஸ்ரீ , பவதாரணி . உண்மையிலேயே சங்கீதத்தைப்பொறுத்த வரை இந்த குரல்கள் எல்லாம் தவறான குரல் தான். இருந்தாலும் அவர்கள் ஜொலிக்கக் காரணம் அவர்கள் ஸ்வரத்தை அறிந்ததால் தான். என் போன்ற குரல் இல்லாதவர்களாலும் நன்றாக பாட முடியும், ஸ்வரம் தெரிந்தால்!!

இதில் குரலோடு, ஸ்வரம் சேர்ந்தால் - அது தெய்வீகம்!!

No comments: