15 October 2006

முழுமை!!

ஓர் பெண் எப்பொழுது முழுமை அடைகிறாள்!! இதில் பலருக்கு பலவிதமான கருத்து.பொதுவான ஒரு கருத்து ஒரு பெண் தாய்மை அடையும் பொழுது தான் முழுமை அடைகிறாள் என்பது!

இது பழசு கண்ணா பழசு !

இப்பொழுது, ஒர் பெண், தான் பெற்ற பிள்ளையை சிறந்த முறையில் வளர்த்து அவன் ஒரு சிறந்த குடிமகனாக விளங்கினால் மட்டுமேஅவள் முழுமை அடைகிறாளாம்!!

இது என்ன புதுசு கண்ணா புதுசா!!

இது என் நண்பர் ஒருவரின் கருத்து! தாய்மை அடைந்தவள் எல்லாம் முழுமை அடைந்ததாக சொல்லி விட முடியாது. அப்படி சொன்னால், ஒரு குழந்தையைபெற்று அதை அனாதையாக விடுகிறாளே, அந்த பெண்ணும் முழுமை அடைந்து விடுவதாக ஆகி விடுகிறதே - இது சரியா!!

இது தான் அந்த நண்பரின் கருத்து.

என் நண்பரின் இந்த கருத்தை பார்க்கும் பொழுது எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், அவர் பார்வையில் ஒரு குழந்தை அனாதை ஆவதற்கு அந்த தாய் மட்டுமே காரணம் என்பது போல் உள்ளது.அது உண்மை தானா!! இந்த இடத்தில் அந்த குழந்தைக்கு காரணமான அந்த ஆண் எங்கே போனான். அவனுக்கு இதில் எந்த பங்கும் இல்லையா!! எல்லாவற்றிற்க்கும் அந்த பெண்ணை மட்டும் குற்றம் சொல்வது நியாயமா!!

ஒவ்வொருதருடைய சிந்தனைகளும் மாறுபடும் தான். அதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் பொது இடத்திலோ அல்லது இது போன்ற இணையத்திலோ பதிவு செய்யும் போது தராசின் முள்ளாக நின்று யோசிக்கலாமே!! என்ன சரி தானா??

No comments: