25 October 2006

சந்திப்பு!!

Friendship Forever

ஒவ்வொரு வருஷமும் தீபாவளிக்கு அடுத்த நாள் என்னோட பட்ட மேற்படிப்பு படிச்ச நண்பர்கள் எல்லோரும் எங்கே இருந்தாலும் அன்று காலையில் 10.30 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக் குளக்கரையில் சந்திப்பது என்று முடிவுசெய்து இருந்தோம். அதே போல் இந்த ஆண்டும் சந்திப்பு நடந்தது. இது இரண்டாம் வருடம்.

பங்கு கொண்ட நண்பர்களில் பலர் தொலை தூரங்களில் உள்ள பல் வேறு ஊர்களில் பணியாற்றுபவர்கள். இந்த சந்திப்புக்காகவே ஊரில் இருந்து வந்திருந்தாங்க. போன வருஷம் பெண்ணுங்க மட்டுமே வந்திருந்தோம். ஆனால் இந்த முறை பசங்க கூட வந்திருந்தாங்க. என் கூட படித்தவர்கள் தானான்னு நினைக்கிற அளவு ஒவ்வொருத்தரும் நல்ல நிலைமையில் இருக்காங்க. அவங்க பண்ண பந்தா இருக்கே!! ரொம்ப ரொம்ப சந்தேஷமா இருந்தது. இதுல ஒருத்தி அவள் புருஷனோடு வந்திருந்தா. 5 மாதக் குழந்தையை வயிற்றில் சுமந்த படி. எனக்கு அவள் வயிற்றை தொட்டுப் பார்க்க ஆசையாக இருந்தது. பக்கத்தில் அவள் கணவர். 7 மாதமானால் தான் அசைவுகளை உணர முடியும்மாம். அதற்காகத் தான் நானும் காத்திருக்கிறேன்னு சொன்னா. அட எல்லாரும் என்னை மாதிரியே ஆசைப் படுறாங்கப்பா. சரி இவ குழந்தைத் தான் வயித்திலே இருக்கு தொட முடியல, இன்னொருத்திக்கு குழந்தை பிறந்து 3 மாசம் ஆச்சின்னு சொன்னாங்க. சரி அவ வரட்டும், அவ குழந்தையை தூக்கலாம்னு ரொம்ப ஆசையா இருந்தேன். ஆனா அவ வரவேயில்லை. போன்ல அவ பையன் அழறதும் அவ சமாதனப் படுத்துறதும், என்னைய ஒரு 'அட' போட வச்சிருச்சு!!

போன வருஷம், எங்களில் நிறைய பேர் வேலை தேடும் வேலையில் இருந்தோம். ஆனால் இன்று எல்லோரும் வேலையில். ஆமாம் வெற்றியின் முதல் படியில் ஏறி விட்டோம்.

ஒவ்வொரு வருஷமும் இந்த சந்திப்பு தொடர்ந்தா ரொம்ப ரொம்ப சந்தேஷமா இருக்கும்.

தொடருமா!! பார்க்கலாம்!!.........................

2 comments:

Karthik Kumar said...

engappa romba naala aala kanom.
eludunga innum.

-Karthic

Imran said...

Finally i got the option of posting comments into your blog
so i will continue posting comments
u r doing good job continue